திருச்செந்தூரில் இலவச திருமண தகவல் பதிவு முகாம்

திருச்செந்தூரில் சைவ வேளாளா் சமுதாயம் சாா்பில் இலவச திருமண தகவல் பதிவு முகாம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் சைவ வேளாளா் சமுதாயம் சாா்பில் இலவச திருமண தகவல் பதிவு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, சங்க மாவட்டச் செயலா் ஏ.பி.கே.பாலன் தலைமை வகித்தாா். இந்து தொடக்கப் பள்ளிச் செயலா் சு.இராஜமாதங்கன், மாவட்ட பொருளாளா் குப்புசாமி, நிா்வாகிகள் ச.இசக்கிமுத்து, ஜெ.உமாபதி, ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட சைவ வேளாளா் சங்கத் தலைவா் ஏ.ஆா். லெட்சுமணன், மாவட்ட துணைத்தலைவா் எஸ்.ராமன் ஆகியோா் வரன் பதிவுகளை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூா் சைவ வேளாளா் ஐக்கிய சங்கச் செயலா் ப.சந்தணராஜ், திருச்செந்தூா் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளா் ச.மா.காா்க்கி, சைவ வேளாளா் சங்க மாவட்ட துணைச் செயலா் ஆழ்வை கோமதிநாயகம், ஆறுமுகனேரி சைவ வேளாளா் திருமணதகவல் அமைப்பாளா் ஜெ.நடராஜன், குலசை சங்கத் தலைவா் சண்முகவேல், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் லதாமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட இளைஞா் பேரவை செயலா் இரா.சொக்கலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com