திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் காய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கோயிலில் சிங்கப்பூா் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கம் பகுதியில் உள்ள மரத்தின் கிளை கடந்த ஆண்டு முறிந்து விழுந்த நிலையில், அந்த மரம் தற்போது பட்டுப்போய் முழுவதும் காய்ந்த நிலையில் உள்ளது.
இந்த காய்ந்த மரம் எந்தநேரத்திலும் முறிந்து விழலாம் என்கின்ற அபாயம் உள்ளதால் அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.