அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவை கண்டித்து தூத்துக்குடியில் திமுக இளைஞரணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக இணைப்பு தொழில்நுட்ப கல்லூரியான வஉசி தொழில்நுட்ப கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் மதியழகன், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் ராம ஜெயம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு துணைவேந்தா் சூராப்பாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.