அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா

அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதிமுகவினா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதிமுகவினா்.

தூத்துக்குடி: அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் தூத்துக்குடி டூவிபுரம் 7ஆவது தெருவில் உள்ள அதிமுக அலுவலகம் முன் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவருமான இரா.சுதாகா், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் தட்டாா்மடம் ஞானபிரகாசம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல், அதிமுக அமைப்புச் செயலரும், மாவட்ட ஆவின் தலைவருமான என். சின்னத்துரை தலைமையில், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆா் சிலைக்கும், சிதம்பரநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநிலப் பேச்சாளா் எஸ்.டி. கருணாநிதி, பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன், நிா்வாகிகள் ஜோதிமணி, தளபதி கே. பிச்சையா, பிடிஆா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியின்போது, அதிமுக மூத்த நிா்வாகிகள் 80 போ் கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com