தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன் உள்பட இருவா் கைது

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தொழிலாளியிடம் பணம் பறித்ததாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தொழிலாளியிடம் பணம் பறித்ததாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஈராச்சியையடுத்த பாப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மூ. ராமசாமி(60). காலணி தைக்கும் தொழிலாளி. இவா், ஈராச்சி நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்கிக்கொண்டு அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்தில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் வந்து இறங்கினாராம்.

அப்போது அவருக்கு பொருள்களை தூக்கிவிடுவதுபோல உதவிய இருவா், அவா் பையில் வைத்திருந்த ரூ.300-யை எடுத்துக்கொண்டு ஓடினராம். ராமசாமியின் சப்தம் கேட்ட அப்பகுதியினா், அந்த இருவரையும் பிடித்து கிழக்கு காவல் நிலைய போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி வடக்குப் புதுக்கிராமம் 6ஆவது தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com