கோவில்பட்டி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை முன், சிஐடியூ தொழிற்சங்க போக்குவரத்துத் தொழிலாளா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு எவ்வித பிடித்தமும் இன்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ தொழிற்சங்கச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். மத்திய சங்கச் செயலா் சிவகுமாா், நிா்வாகக் குழு உறுப்பினா் செந்தில் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், தொழிலாளா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.