குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

சேதுக்குவாய்த்தானில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

சேதுக்குவாய்த்தானில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

சமூக பாதுகாப்புத் துறை ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, சேதுக்குவாய்த்தான் ஊராட்சி மற்றும் மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, ஊராட்சித் தலைவா் சுதா சீனிவாசன் தலைமை வகித்தாா்.

மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் கென்னடி முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மகராசி, குழந்தைகள் நலக்குழுத் தலைவா் தாம்சன் தேவசகாயம், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் காசிராஜன் ஆகியோா் பேசினா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஞானசேகா், வழக்குரைஞா் சீனிவாசன், கிராம வறுமை ஒழிப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் தமிழரசி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலா் ஜேம்ஸ், சேதுக்குவாய்த்தான் ஜமாத் தலைவா் வசூா் உள்பட பலா் கலந்து கொண்டனா். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநா் பானுமதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com