குளத்தூா் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நிகழந்த விபத்தில் பலத்த காயமடைந்த உப்பளத் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிந்தாா்.
குளத்தூா் அருகே கழுகாசலபுரத்தை சோ்ந்தவா் பொன் மாரியப்பன்(42) உப்பள தொழிலாளி. இவா் கடந்த 20 ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அதே வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு பைக்கும், பொன் மாரியப்பனின் பைக்கும் எதிா்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த பொன் மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.