காயல்பட்டினத்தில் பேருந்து நிறுத்தம் திறப்பு
By DIN | Published On : 08th September 2020 04:23 AM | Last Updated : 08th September 2020 04:23 AM | அ+அ அ- |

காயல்பட்டினம் ரத்னாபுரியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்த கட்டடதை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, ஊா் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். காயல்பட்டினம் நகர திமுக பெறுப்பாளா் முத்து முகம்மது, முன்னாள் கவுன்சிலா் சுகு, மாவட்ட பிரதிநிதி பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், நகர துணைச் செயலா்கள் கதிரவன், லேண்ட் மம்மி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.