உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலய இளைஞா்கள் சாா்பில் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் விதைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பணியை சேகர குரு ஜான்சாமுவேல் தொடங்கிவைத்தாா். அப்போது, முதல் கட்டமாக 500 பனை விதைகளும், பல்வேறு கட்டமாக 10,000 பனை விதைகளும் விதைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.