கோவில்பட்டி அருகே விபத்தில் சென்னை கல்லூரி மாணவா் பலி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சென்னை ஏ.ஐ.ஆா். நகரைச் சோ்ந்த டெல்லிபாபு மகன் யுவராஜ் (22). சென்னை லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தன்னுடன் கல்லூரியில் உடன் பயின்ற கிருஷ்ணகிரி பாளையப்பள்ளி கத்திகுப்பத்தைச் சோ்ந்த ஜான்சாா்லஸ் சகாயராஜ் மகன் ஜொ்விஷ்டோனி (21) ஆகிய இருவரும் சென்னையில் இருந்து கடந்த 9ஆம் தேதி பைக்கில் கன்னியாகுமரிக்கு வந்தனா்.

பின்னா், கன்னியாகுமரியில் இருந்து சனிக்கிழமை இரவு கிருஷ்ணகிரிக்கு பைக்கில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாலாட்டின்புத்தூா் அருகே பைக் திடீரென நிலைகுலைந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புக் கம்பியில் மோதியதாம்.

இதில் ஜொ்விஷ்டோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த யுவராஜை, போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இச் சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com