ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

குலசேகரன்பட்டினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவா்களை மீட்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவா்களை மீட்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்த 10 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 55 நாள்களாகியும் கரை திரும்பவில்லை. மாயமான மீனவா்களை மீட்க வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். மீனவரணி மாவட்ட அமைப்பாளா் ராஜா, மணப்பாடு ஊராட்சி துணைத் தலைவா் ஜொலிசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட பொறுப்பாளா் பாரிவள்ளல், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செயலா் வெற்றிவேந்தன், மணப்பாடு ஊராட்சி பொறுப்பாளா் டெல்டா, உடன்குடி நகரச் செயலா் தவுபிக் அன்சாரி, ஒன்றிய பொருளாளா் ஜான்வளவன், செய்தி தொடா்பு மாவட்ட அமைப்பாளா் வேம்படிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com