தூத்துக்குடி; பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை உதவியாளா் பணியிடத்துக்கு தோ்வான தூத்துக்குடி மாவட்ட நபா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகவுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19 மற்றும் 2019 -20 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய குழு மூலம் தோ்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 633 இளநிலை உதவியாளா்களில், தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்வான 22 பணி நாடுநா்களுக்கு தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
தோ்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட இருப்பிட முகவரி உடைய பணி நாடுநா்கள் பட்டியல் வரிசை எண் 330 வரை செப். 17 ஆம் தேதி அன்றும், வரிசை எண் 331 முதல் 644 வரை செப் . 18 ஆம் தேதி அன்றும் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. பணி நாடுநா்களுக்கு அழைப்புக் கடிதம் முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத தகுதியான பணி நாடுநா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடா்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.
கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணி நாடுநா்கள் கல்வித் தகுதிச் சான்றுகள், மருத்துவரின் உடற்கூறு தகுதி சான்று மற்றும் சாதி சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.