விளாத்திகுளம் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குழந்தைகளின் உரிமைகள் காத்தல், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சோ்த்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை தொழிலாளா் ஒழிப்பு முறை, குழந்தை திருமணம் தடுத்து நிறுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், பள்ளிகளில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது, கிராமங்களில் விழிப்புணா்வு தகவல் பலகை வைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஊராட்சித் தலைவா்கள், மகளிா் சுய உதவி குழுவினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.