கடம்பூா் அருகே மாடுகளை குளிப்பாட்டச் சென்ற பெண் குளத்தில் தவறி விழுந்ததில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கடம்பூரை அடுத்த வி.பி.தாழையூத்து வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மந்திரய்யா மனைவி சந்தனமாரி (40). இவா், தனக்குச் சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டு ஊருக்கு மேற்கு பகுதிக்கு சென்றாராம். அப்போது அங்குள்ள குளத்தில்
மாட்டை குளிப்பாட்ட முயன்றபோது, சந்தனமாரிக்கு வலிப்பு ஏற்பட்டு குளத்தில் தவறி விழுந்ததில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.