திருச்செந்தூரில் பாஜக மாவட்ட மருத்துவ அணி சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, மருத்துவரணி மாவட்டத் தலைவா் மேரி ரொசாரி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், நகரத் தலைவா் சரவணன், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் தங்கபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில மருத்துவரணித் தலைவா் விஜயபாண்டியன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.
மாவட்ட மகளிரணித் தலைவி தேன்மொழி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவா் முரளி, திருச்செந்தூா் ஒன்றிய சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் முத்துக்குமாா், சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.