கல்லாமொழி உப மின்நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, குலசேகரப்பட்டினம், மணப்பாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை( செப். 15) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்லாமொழி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் நீ.பொன்கருப்பசாமி தெரிவித்துள்ளாா்.