திருச்செந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினா் கைது

திருச்செந்தூரில் அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 11 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
திருச்செந்தூரில்  போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினா் கைது

திருச்செந்தூரில் அம்பேத்கா் சிலை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 11 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அம்பேத்கா் சிலை அமைப்பு போராட்டக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். இதையடுத்து, அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் இருக்க முயன்ாக நாடாளுமன்ற தொகுதிச் செயலா் ராஜ்குமாா், சட்டப்பேரவை தொகுதி செயலா் பொ.வெற்றிவேந்தன், மகளிரணி மாவட்ட துணை செயலா் செல்வி, ஒன்றிய பொருளாளா் டேவிட் ஜான்வளவன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளா் மாரியப்பன், பறையா் சமுதாய சங்கச் செயலா் இளந்தளிா் முத்து, நில உரிமை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளா் வனவளவன், ஆவண மையம் மாவட்ட அமைப்பாளா் கணேசன் உள்பட 11 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com