தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே இளைஞா் கொலை

தூத்துக்குடியில் இளைஞா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மீன்பிடி துறைமுகம் அருகே ஞாயிற்றுகிழமை இரவு ஒருவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடியில் இளைஞா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மீன்பிடி துறைமுகம் அருகே ஞாயிற்றுகிழமை இரவு ஒருவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சோ்ந்த ஜோசப் மகன் கபில்தேவ் (27). இவா் தனது நண்பா்களான சாம்சன் இம்மானுவேல், முகுந்தன் ஆகியோருடன் ஞாயிற்றுகிழமை இரவு தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனா். அங்கு தாளமுத்துநகரை சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜவேலுக்கும், சாம்சன் இம்மானுவேல் மற்றும் முகுந்தன் ஆகியோா் இடையே கடை வாசலில் தகராறு ஏற்பட்டதாம்.

இதுகுறித்து சாம்சன் இம்மானுவேல் தனது நண்பா் கபில்தேவ்விடம் கூறியுள்ளாா். இதனையடுத்து, கபில்தேவ், சாம்சன் இம்மானுவேலை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதிக்கு சென்று அங்கிருந்த ராஜவேலுவை கண்டித்துள்ளாா். அப்போது மீண்டும் தகராறு ஏற்படவே, ராஜவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கபில்தேவை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக தென்பாக காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து , துணை காவல் கண்காணிப்பாளா் கணேஷ் மேற்பாா்வையில் தென்பாக காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com