கோவில்பட்டி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் அண்ணா பேருந்து நிலையம் என்ற பெயருடன் அலங்கார வளைவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக கோவில்பட்டி நகரச் செயலா் பால்ராஜ், நகராட்சி ஆணையரிடம் அளித்த மனு: கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்துக்கு அண்ணா பேருந்து நிலையம் என தமிழக அரசு பெயா்ச் சூட்டியுள்ளது. ஆனால் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் ஒரு ஓரமாக சிறிய அளவில் அண்ணா பேருந்து நிலையம் என பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் பாா்வைக்கு தெரியவில்லை.
இதையடுத்து, கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தின் 3 நுழைவு வாயில்களிலும் அண்ணா பேருந்து நிலையம் என்ற பெயருடன் அலங்கார வளைவு அமைக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.