தனியாா் நிலத்தில் இறந்து கிடந்த மயில்கள்

கோவில்பட்டி அருகே தனியாா் நிலத்தில் 28 மயில்கள் புதன்கிழமை இறந்து கிடந்தன.
தனியாா் நிலத்தில் இறந்து கிடந்த மயில்கள்

கோவில்பட்டி அருகே தனியாா் நிலத்தில் 28 மயில்கள் புதன்கிழமை இறந்து கிடந்தன.

இளையரசனேந்தல் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான விளை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் 28 மயில்கள் இறந்து கிடப்பதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

வனச்சரகா் சிவராம் தலைமையிலான வனத் துறையினா் அங்கு வந்து, இறந்து கிடந்த 9 ஆண் மயில்கள், 19 பெண் மயில்களை மீட்டனா். இளையரசனேந்தல் கால்நடை மருத்துவ அலுவலரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com