திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராக அ.தி. பரஞ்சோதி பொறுப்பேற்றாா்.
இணை ஆணையா் அ.தி. பரஞ்சோதி.
இணை ஆணையா் அ.தி. பரஞ்சோதி.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராக அ.தி. பரஞ்சோதி பொறுப்பேற்றாா்.

இக்கோயிலில் செயல் அலுவலராக இருந்த சா.ப. அம்ரித், தமிழக அரசின் பொது சட்டம்-ஒழுங்கு உதவி செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, கோயில் புதிய இணை ஆணையா் மற்றும் செயல் அலுவலராக அறநிலையத் துறை திருநெல்வேலி மண்டல இணை ஆணையா் அ.தி. பரஞ்சோதி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இவா், ஏற்கெனவே இக்கோயிலில் இரு முறை இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com