பணம் வைத்து சூதாடிய 8 போ் கைது

ஆறுமுகனேரி அருகே பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆறுமுகனேரி அருகே பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆறுமுகனேரி ஆய்வாளா் செல்வி மற்றும் போலீஸாா் புதன்கிழமை அருகே உள்ள கொட்டமடைக்காடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது காட்டுக்குள் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்து. அவா்கள் அனைவரையும் போலீஸாா் சுற்று வளைத்து கைது செய்தனா்.

விசாரணையில், ஆறுமுகனேரி பூவரசூா் குமாா் (32), பரமன்குறிச்சியைச் சோ்ந்த தனசேகரன் (44), ஜெயபால் (50), ஆறுமுகனேரி சக்தி (25), கீழநவலடிவிளை சங்கி­லிபாண்டி (24), பாரதிநகா் ராமச்சந்திரன் (32), காணியாளா் தெரு பட்டுராஜ் (40), அருணாசலம் (39) என்பது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து ரூ.35 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com