தூத்துக்குடி
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
படைப்புழுக்களால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
படைப்புழுக்களால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியா்அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலா் சீனிராஜ், மாநில துணைத் தலைவா் நம்பிராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் ராஜேந்திரன், தலைவா் நடராஜன், துணைத் தலைவா் சாமியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா் ஆா்ப்பாட்டக் குழுவினா் கோட்டாட்சியா் விஜயாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.