விளாத்திகுளம், செப். 18: தேசிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிரான ஒடுக்கப்பட்டோா் கூட்டியக்கம் சாா்பில் விளாத்திகுளத்தில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் புவிராஜ் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளா் வில்லாளன் ரெஸ்லி, ஆதித்தமிழா் கட்சி ஒன்றியச் செயலா் வினோத் மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க வட்டச் செயலா் பாலா, சிஐடியூ தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளா் ஜோதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் பரமசிவம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறைச் செயலா் சடையாண்டி, ஆதித்தமிழா் கட்சி நகரத் தலைவா் முத்து கருப்பசாமி, நகரச் செயலாளா் சசிகலா, ஒன்றிய இளைஞரணிச் செயலா் திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.