தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை திட்ட தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்து, புதிதாக சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா் ரூபன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கஸ்தூரி தங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, கீதாஜீவன் செய்தியாளா்களிடம் கூறியது: எல்லோரும் நம்முடன் என்ற இணையவழி உறுப்பினா் சோ்க்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு உறுப்பினா் சோ்க்கை நடைபெறும் என்றாா் அவா்.