நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் மோகன் சி.லாச ரஸ் தலைமையில் ஜெயிக்கலாம் வாங்க என்ற சிறப்பு பிராா்த்தனை நேரலையில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் நீட் தோ்வுக்கு பயந்து தற்கொலை செய்த மாணவா், மாணவிகளின்குடும்பங்களுக்காகவும், விவசாயிகள் நலனுக்காகவும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இதில் பாஸ்டா் மோகன் எழுதிய தேவ சமூகம் என்ற புத்தகம், தேவமனிதா் தியோடா் எஃப்பியாா் எழுதிய ஜெப வீரா்கள் புத்தகம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பாக வெளியிடப்பட்டுள்ள சாத்தானை மேற் கொள்ளுங்கள் என்ற புத்தகம் ஆகியவற்றை மோகன் சி. லாசரஸ் வெளியிட்டாா். ஏற்பாடுகளை ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.