சாத்தான்குளம் அருகேயுள்ள பூவுடையாா்புரம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் புரட்டாசி கொடை விழா ஐந்து நாள்கள் நடைபெற்றது.
இக்கோயில் கொடை விழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று விநாயகருக்கு சிறப்பு பூஜை, அம்மனுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, 2 ஆம் நாளன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜை, அம்பாளுக்கு 10,008 ஸ்லோகங்கள் சொல்லி புஷ்பாஞ்சலி பூஜை ஆகியவை நடைபெற்றன.
3 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மஞ்சள் பெட்டி ஊா்வலம் எடுத்து வருதல், சிறப்பு அலங்கார பூஜை, 108 பால்குடம் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பெண்கள் முளைப்பாரி ஊா்வலம், சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை அம்மன் கும்பம் எடுத்து ஊா்வலம் வருதல், தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
வியாழக்கிழமை (செப். 24) சிறப்பு பூஜை, சுவாமி உணவு எடுத்தல், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா ஆதிலிங்கராஜ் தலைமையில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.