கோவில்பட்டி: சிறாா் பாலியல் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் ஆகியன சாா்பில் சிறாா் பாலியல் குற்றத் தண்டனைகளை தடுக்கும் வகையில், குற்றத் தண்டனை குறித்த வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா் வழங்கும் நிகழ்ச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ரோட்டரி சங்கச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜ், தணிக்கை வட்டார வள அலுவலா் முத்துமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் கலந்து கொண்டு, விழிப்புணா்வு ஸ்டிக்கரை வழங்கினாா். தொடா்ந்து, அலுவலக சுவற்றில் ஸ்டிக்கா் ஒட்டும் பணியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ், ரோட்டரி சங்க உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.