தாழையூத்திலிருந்து திருச்செந்தூருக்கு உரிய ஆவணங்களின்றி மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை (கனிமம்) தனி வருவாய் ஆய்வாளா் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினா், செவ்வாய்க்கிழமை குரும்பூா் அருகே உள்ள நல்லூா் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த மணல் லாரியை சோதனையிட்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி தாழையூத்திருந்து திருச்செந்தூருக்கு எம்.சாண்ட் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த குரும்பூா் போலீஸாா், மணலுடன் லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநா் சரவணனை கைது செய்தனா்.
மேலும் லாரி உரிமையாளா் பாதாளமுத்து மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.