விதிமுறை மீறல்: 2 போ் கைது

கோவில்பட்டி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவராஜா தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டியையடுத்த புதூா் லட்சுமியாபுரத்தில் உள்ள அம்மன் கோயில் அருகே அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி கோயில் திருவிழா கொண்டாடியது மற்றும் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த முத்து இருளாண்டி மகன் வடிவேல் (37), தங்கவேல் மகன் ஆறுமுகச்சாமி (33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com