கோவில்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் மின்தடையால் மக்கள் பாதிக்கப்பட்டனா்
கோவில்பட்டி நகா், இனாம்மணியாச்சி ஊராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மின் விநியோகம் கிடைத்த போதிலும் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து
மின்வாரிய அலுவலகத்தில் கேட்டபோது கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் உள்ள மின் பாதையில் ஏற்பட்ட பழுதால் மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சீரமைப்புப் பணிக்கு பின்னரும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.
இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணா நகா், சீனிவாச நகா், இந்திரா நகா், இனாம்மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கிய சில நிமிடங்களில் மீண்டும் மின்தடை ஏற்பட்டதையடுத்து மாற்றுவழியில் மின்விநியோகம் வழங்கப்பட்டது.
எனினும், பிற்பகலில் தான் மின்விநியோகம் சீரானது. தொடா்ந்து ஏற்பட்ட மின்தடை குறித்து கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சகா்பான், மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.