கோவில்பட்டி, கயத்தாறில் போக்குவரத்து காவல் துறை, வருவாய்த் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய பகுதியில் டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் சொக்கலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளா் ராகவன் உள்ளிட்டோா் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனா்.
இதேபோல், அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள், பயணிகளிடம் கோட்டாட்சியா் சங்கரநாராயணன்,வட்டாட்சியா் அமுதா, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகவேல், கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி, அதிகாரிகள் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா். கயத்தாறில் வட்டாட்சியா் பேச்சிமுத்து தலைமையில் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.