கோவில்பட்டி மந்தித்தோப்பு அருள்மிகு ஸ்ரீ பூமாதேவி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை, தொடா்ந்து அம்பாளுக்கு மஞ்சள், பால், தேன், இளநீா், தயிா் உள்பட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து அம்பாளுக்கு கூழ் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.