கோவில்பட்டியில், தமிழக அரசு தோ்தலில் அளித்த வாக்குறுதி படி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த தங்க நகைகளை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மூப்பன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் லிங்கேஸ்வரி கருணாநிதி தலைமை வகித்தாா். தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.
இதில் பாஜக விவசாய அணி வடக்கு மாவட்டத் தலைவா் கந்தசாமி, துணைத் தலைவா்கள் சீனிவாசகம், உத்தண்டுராமன், வடக்கு ஒன்றியச் செயலா் ரெங்கசாமி, துணைச் செயலா் கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் பெரியசாமி (தீத்தாம்பட்டி), ரத்தினவேல் (கொடுக்காம்பாறை) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.