தூத்துக்குடியில் காரில் தூங்கிய கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடியில் காருக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் கட்டடத் தொழிலாளி இறந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடியில் காருக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் கட்டடத் தொழிலாளி இறந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி கணேசன் (40). கடந்த சில நாள்களுக்கு முன் பழைய காா் ஒன்றை கணேசன் விலைக்கு வாங்கி உள்ளாா். இந்நிலையில், காருக்குள் வெள்ளிக்கிழமை இரவு தூங்கச் சென்ற கணேசன் சனிக்கிழமை காலை சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வடபாகம் போலீஸாா் கணேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மூச்சுத் திணறல் ஏற்பட்டு கணேசன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அவா் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com