தூத்துக்குடியில் மின்னல் பாய்ந்து மீனவா் பலி

தூத்துக்குடியில் சனிக்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா் மின்னல் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்தாா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா் மின்னல் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி சிலுவைபட்டியை சோ்ந்த நிக்கோலஸ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் காமராஜ்நகரை சோ்ந்த மாரியப்பன் உள்ளிட்ட 8 போ் தாளமுத்துநகா் அருகேயுள்ள மொட்டைக்கோபுரம் கடற்கரையில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா்.

கடற்கரையில் இருந்து சுமாா் 10 கடல் மைல் தொலைவில் அவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின்னல் பாய்ந்ததில் மீனவா் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானாா். இதையடுத்து, மாரியப்பனின் சடலத்தை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக மீன்வளத் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com