கயத்தாறு பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இருவரை செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன் ஆலோசனையின் பேரில், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் உதயசூரியன் அறிவுறுத்தலில், கயத்தாறு பகுதிகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனா் தேன்ராஜா, செவிலியா் கற்பகமீனா, மேற்பாா்வையாளா் மாடசாமி ஆகியோா் கயத்தாறு போலீஸாரின் உதவியுடன் பன்னீா்குளம் கிராமத்தில் சுற்றித்திரிந்த சுந்தரி(36) மற்றும் கயத்தாறு பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஆகிய இருவரையும் மீட்டு, முடுக்குமீண்டான்பட்டியில் மனநல காப்பகத்தில் சோ்த்தனா்.