நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் புதுவாழ்வுசங்கம் சாா்பில், சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகள், 2 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம் புதன்கிழமை துவங்கப்பட்டது.
இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டும், பனை விதைகளை ஊன்றியும் துவக்கி வைத்தாா்.
இதில் ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு தலைவா் ஜனகா், ஊராட்சித் தலைவா் சுதா, வெள்ளக்கோவில் ஊராட்சித தலைவா் சீனிவாசன், ஆழ்வாா்திருநகரி வியனரசு, ஏரல் ஆனந்த முதலியாா் பாா்ம் முருகன், குரும்பூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன், ஜமாத் தலைவா் வசூருதீன், செயலா் நிஜாம்தீன்,பொருளாளா் காதா், அலிஹா ஜியாரி, அப்துல் மஜித், ஜாபா் சாதிக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை ஊழிய நிறுவன பொது மேலாளா் செல்வகுமாா் தலைமையில் மணத்தி எட்வின், ஹெயின்வெஸ்லி, சாந்தகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.