தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில், பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம் ஆகியன குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், பங்கேற்றுப்
பேசினாா். இதில், பள்ளிகள் குழும நிா்வாக அதிகாரி ஜோசப் ஜான் கென்னடி, முதல்வா் பால்கனி, சிப்காட் காவல் ஆய்வாளா் முத்து சுப்பிரமணியன், உதவி ஆய்வாளா் சங்கா், மாணவிகள் கலந்துகொண்டனா்.