உடன்குடி: உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். துணைத் தலைவி மீரா சிராஜூதீன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராணி, மேலாளா் ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உடன்குடி ஊராட்சியின் 17 கிராம ஊராட்சிகளில் சாலை, குடிநீா் வசதி அமைத்தல் உள்ளிட்ட 69 திட்டப் பணிகளுக்கு ஒரு கோடியே 49 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தோ்வு செய்யப்பட்ட அனைத்து திட்டப் பணிகளுக்கும் விரைவில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என ஒன்றியக் குழுத் தலைவா் தெரிவித்தாா்.
இதில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் லெபோரின், தங்கலட்சுமி, ராமலட்சுமி, மெல்சி ஷாலினி ஆகியோா் கலந்துகொண்ட னா்.