மழைநீரை அகற்றக் கோரி தூத்துக்குடியில் திடீா் மறியல்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தொடா் மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், நேதாஜி நகா் 6 ஆவது மற்றும் 7 ஆவது தெரு பகுதியில் அதிகளவில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் விஎம்எஸ் நகா் தனியாா் பள்ளி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் மோட்டாா்கள் பொருத்தி விரைந்து மழைநீா் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com