கோவில்பட்டி: சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்து, விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளா் கலைகதிரவன், காவல் ஆய்வாளா்கள் அய்யப்பன், பத்மாவதி, ராணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் நாராயணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
காந்தி மைதானத்தில் தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.
இதேபோல், கயத்தாறு சுங்கச்சாவடி முன்பிருந்து புறப்பட்ட இருசக்கர வாகனப் பேரணியையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தொடங்கிவைத்தாா்.