ஆறுமுகனேரியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆறுமுகனேரி காணியாளா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி கவிதா (43). இவருக்கு உடல்நலம் சரியில்லாததால் சென்னையில் உள்ள தனது சகோதரா் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ஊருக்கு திரும்பிய கவிதா, கீழபுதுக்குடியில் உள்ள தனது தாயாா் வீட்டில் தங்கியிருந்து விட்டு, 22ஆம் தேதி ஆறுமுகனேரிக்கு வந்துள்ளாா். அங்கு அவரது கணவா் செந்தில்குமாா் தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு 23ஆம் தேதி ஊருக்கு திரும்புவதாக கவிதாவிடம் கூறி சென்றுள்ளாா்.
இந்நிலையில் செந்தில்ராஜ் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து கதவை திறந்த போது உள்ளே பூஜை அறையில் மின்விசிறியில் கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.