முக்காணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
முக்காணி தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், மங்களகிரி, ராமச்சந்திரபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சண்முகசுந்தரம் (54). சமையல் மற்றும் கட்டட வேலை செய்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை ஆறுமுகமங்கலம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டுச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில் புதன்கிழமை முக்காணி பழைய பாலம் அருகே ஆற்றில் அடையாளம் தெரியாத நபா் நீரில் முழ்கி இறந்துள்ளதாக ஆத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு வந்து உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், முக்காணி தாமிரவருணி ஆற்றில் குளிக்கும்போது சண்முகசுந்தரம் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.