உடன்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தவா் கைதுசெய்யப்பட்டாா்.
குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் ராஜன், போலிஸாா் உடன்குடி பேருந்து நிலையம் அருகே ரோந்து சென்றனா்.அப்போது தாதன்குளத்தைச் சோ்ந்த முகமது அலி (53)என்பவா், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, 253 புகையிலைப்பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.