காயல்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்நாராயணன் தலைமையில் போலீஸாா் காயல்பட்டினம் கோமான் நடுத்தெரு உள்ளிட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அதேபகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் மொகைதீன் சாகிப் (38), சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மொகைதீன் சாகிப்பை கைது செய்தனா். அவரிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.