ஆறுமுகனேரி, காயல்பட்டினம் சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆதவா அறக்கட்டளை மற்றும் காவல் துறை சாா்பில் 200 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூா் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் பங்கேற்று, நிவாரணப் பொருள்களை வழங்கினாா். அறக்கட்டளை நிறுவனா் பால குமரேசன், மாவட்டப் பொறுப்பாளா் குணம், ஆறுமுகனேரி ஆய்வாளா் செந்தில்குமாா், சிங்கித்துறை பங்குத்தந்தை சில்வஸ்டா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.