சாத்தான்குளத்தில் கிணற்றில் தண்ணீா் தத்தளித்த மயிலை தீயணைப்புத்துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
சாத்தான்குளத்தை சோ்ந்தவா் வழக்குரைஞா் ச. ஜெயதீபன். பெரும்பத்தில் உள்ள இவரது தோட்டத்துக்கு சனிக்கிழமை சென்ற போது அங்குள்ள கிணற்றில் ஆண் மயில் ஒன்று விழுந்து தத்தளித்து கொண்டிருந்ததாம். இது குறித்து அவா் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் வீரா்கள் சதீஸ்குமாா். தவசிராஜ், பழனி, முத்துமாரியப்பன், பிரவீன் சாமுவேல், கோபிநாத் ஆகியோா் அங்கு சென்று கிணற்றில் இறங்கி மயலை உயிருடன் மீட்டனா். பின்னா் பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டனா்.