கயத்தாறு அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.
கோவில்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட நாகலாபுரம் பகுதியில் மா்ம நபா்கள் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவில்பட்டி வனச்சரக அலுவலா் பாரதி தலைமையில், வனக்காப்பாளா்கள் பாலகிருஷ்ணன், முகமது பைசல் ராஜா உள்ளிட்டோா் கண்காணிப்பில் ஈடுப்பட்டனா். அப்போது நாகலாபுரம் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்டதாக சுப்பையாபாண்டி மகன் காா்த்திக் (31) என்பவரை கைது செய்தனா்.